BREAKING NEWS
latest

Wednesday, August 28, 2019

இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் முரளிதரன் செப்டம்பர் பாதியில் குவைத்திற்கு வருகை :


இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் முரளிதரன் செப்டம்பர் பாதியில் குவைத்திற்கு வருகை தருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் முரளிதரன் அடுத்த மாதம்  செப்டம்பர் பாதியில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக குவைத்திற்கு வருகை தருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள்  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் அவர்கள் வருகையின் போது கடத்த அக்டோபரில் இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த குவைத் & இந்தியா ஒப்பந்தத்தில்
கையொப்பமிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளன நிலையத்தில் முரளிதரன் வருகையின் போது இந்த ஒப்பந்தம் நிறைவேறும் என்று தெரிகிறது.

கடந்த மோடி அரசின் ஆட்சியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் துணை வெளியுறவுத்துறை அமைச்சர்களாக இருந்த வி.கே. சிங் மற்றும் M.J. அக்பர் ஆகியோரும் குவைத்திற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இது குறித்த அதிகாரபூர்வமாக தகவல் எதையும் இந்திய தூதரகம் இதுவரையில் வெளியிடவில்லை.

Reporting by:Kuwait tamil pasanga Team.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் முரளிதரன் செப்டம்பர் பாதியில் குவைத்திற்கு வருகை :

« PREV
NEXT »