BREAKING NEWS
latest

Thursday, August 8, 2019

குவைத்தில் 6 மாதங்களாக மருத்துவமனையில் இருந்தது தாயகம் திரும்பிய தமிழருக்கு 4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது:

குவைத்தில் 6 மாதங்களாக மருத்துவமனையில் இருந்தது தாயகம் திரும்பிய தமிழருக்கு 4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது:

குவைத்தில் கடந்த 10 ஆண்டுகளாக குவைத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வசிக்கும் தேவதாஸ்,மார்ச் 10, 2019 அன்று திடிரென நிலை குலைந்து தரையில் விழுந்தார்,அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஜாபிரியா முபாரக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஐ.சி.யுவில் ஒரு மாதம், பின்னர் அறை எண் 14 இல் உள்ள மருத்துவ வார்டு 19-யில்  கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தால் மேலும்
இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது அதற்க்கும் சிகிச்சை பெற்று வருகிறார்.தூதரகம், அமைப்பு மற்றும் சக ஊழியர்களின் உதவியுடன் அவரை வீட்டிற்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்து 3 ஆம் தேதி  இன்று மாலையில் எயர்லைன்ஸ் விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருடைய வீடு வரையில் அழைத்துச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு பக்கபலமாக குவைத் மனித உரிமை ஆணைய சமுக ஆர்வலர் ஆல்வின் ஜோஸ் அவர்களும் இருந்தார். கடந்த ஆறு மாதங்களாக அவருக்கு தேவையான தன்னால் முடிந்த அளவு உதவிகள் செய்தார். சிகிச்சையில் இருந்தவருக்கு தாயகம் செல்ல பயணதடை இருந்தது.பயண தடை நீக்கி தாயகம் அனுப்புவதற்கு தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுத்தார்.

குவைத்தில் இயங்கி வருகிற கேரளா நண்பர்கள் அமைப்பான "குவைத் யாத்ரா" என்ற ஓட்டுநர் அமைப்பினர் தங்களால் திரட்டப்பட்ட 4 லட்சம் நிதியுதவியை அவருடைய மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்
.மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை உள்ளடக்கிய இந்த குடும்பம் நீண்ட காலமாக வாடகை வீடுகளில் வசித்து வருகிறது.இந்த குடும்பத்தின் ஒரே பாதுகாப்பாக தேவதாஸ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 6 மாதங்களாக மருத்துவமனையில் இருந்தது தாயகம் திரும்பிய தமிழருக்கு 4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது:

« PREV
NEXT »