BREAKING NEWS
latest

Thursday, June 27, 2019

குவைத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் வெளிநாட்டினருக்கான சேவை கட்டணங்கள் உயர்த்த திட்டம்:

குவைத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் வெளிநாட்டினருக்கான சேவை கட்டணங்கள் உயர்த்த திட்டம்:
குவைத்தில் இந்தியா,இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வேலை செய்து வருகிறார்.இதில் பலர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். அவர்களை பெரிதும் பாதிக்கும் விதத்தில் மகப்பேறு மருத்துவமனைகளில் கருவுற்றிருக்கும் வெளிநாட்டு பெண்களுக்கு  பிரசவம் மற்றும் பரிசோதனைகள் தொடர்பான சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

 நேற்று(புதன்கிழமை) நடந்த பாராளுமன்ற கூட்டத்தின் போது உறுப்பினர் சஃபா அல்-ஹாஷிம் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் விதமாக சுகாதார அமைச்சர் ஷேக் பாசில் அல்-சபா இதைத் தெரிவித்தார் என்று குவைத் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.

Reporting by Kuwait tamil pasanga team.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் வெளிநாட்டினருக்கான சேவை கட்டணங்கள் உயர்த்த திட்டம்:

« PREV
NEXT »