BREAKING NEWS
latest

Sunday, October 22, 2023

குவைத்தில் வலைதள பதிவு மூலம் இந்தியரான செவிலியர் ஒருவர் சிக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்திய செவிலியர் ஒருவர் மீது இன்று பொது நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Image : பதிவுக்காக மட்டுமை

குவைத்தில் வலைதள பதிவு மூலம் இந்தியரான செவிலியர் ஒருவர் சிக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்திய செவிலியர் ஒருவர் மீது இன்று(22/10/23) பொது நல நீதிமன்றத்தில் புகார்(வழக்கு) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முபாரக் அல் கபீர் மருத்துவமனையில் பணிபுரியும் இந்திய செவிலியருக்கு எதிராக இந்த வழக்கு தொடர பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக ஆதாரங்களை மேற்கோள் காட்டி தினசரி நாளிதழ் ஒன்று மாலையில் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீன போர் துவங்கிய பிறகு இதுபோன்ற ஒரு புகார் குவைத்தில் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்தற்கு ஆதரவாக செவிலியர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது இஸ்ரேல் மீதான குவைத்தின் ஆதரவான நிலைப்பாட்டிற்கு முரண்பாடானதாகவும், குவைத் அரசுக்கு சவால் விடுவதாக இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த செவிலியர் குறித்த கூடுதல் தகவல்களை அமைச்சகம் வெளியிடவில்லை. இந்த செவிலியர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வளைகுடா உள்ளிட்ட பல நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கும் தங்களுடைய ஆதரவை அளித்து வருகின்றன நிலையில், இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் இஸ்ரேலுக்கு தங்களுடைய ஆதரவை அளித்து வருகின்றன. தங்களுடைய நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்க்கு செல்கின்ற யாராக இருந்தாலும் அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் நிலைப்பாடு போன்றவற்றை அறிந்து செயல்படுவது நலம். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர்.சுனில் ராவ் பஹ்ரைன் நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Indian Nurse | Social Post | Case Filed
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வலைதள பதிவு மூலம் இந்தியரான செவிலியர் ஒருவர் சிக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »