BREAKING NEWS
latest

Wednesday, May 31, 2023

குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை மரம் வளர்ப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது

குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை சாகுபடி என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பத்தாயிரம் முருங்கை நாற்றுகள் இலவசமாக விநியோகிக்க முடிவு

Image : முருங்கை நாற்றுகள் வினியோகம்

குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை மரம் வளர்ப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது

குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை சாகுபடி என்ற தேசிய பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பத்தாயிரம் முருங்கை நாற்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும். கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தின் மூலம் 40,000 மரக்கன்றுகள் ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டின் வடக்குப் பகுதிகளில் வளர்க்கப்படும் முருங்கை நாற்றுகளே இவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன

மேலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சித் தலைவர் பாத்திமா அல்-கைத் தெரிவித்தார். நாட்டின் ஆறு கவர்னரேட்டுகளில் அமைந்துள்ள முப்பத்தைந்து ஜமியாக்கள் மூலம் நாற்றுகள் விநியோகிக்கப்படுகின்றன. moringakuwait.com என்ற இணையதளம் மூலம் முருங்கையின் மருத்துவ குணங்கள் மற்றும் முருங்கை தொடர்பான சமீபத்திய ஆய்வுகள் பற்றிய விபரங்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர் என்றும் தலைவர் விளக்கம் அளித்தார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை மரம் வளர்ப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »