BREAKING NEWS
latest

Tuesday, December 20, 2022

குவைத்தின் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி மீட்கப்பட்டார்:

குவைத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடல் வழி பாலத்தில் இருந்து குதித்து மீண்டும் ஒரு தற்கொலை முயற்சி நடந்துள்ளது

Image : மீட்கப்பட்ட சிறுமி

குவைத்தின் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி மீட்கப்பட்டார்:

குவைத்தின் பிரபலமான Jaber கடல் பாலத்தின் மேலிருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி ஒருவர் மீட்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு ஒரு சிறுமி பாலத்தின் மேலிருந்து கடலில் குதித்ததை பார்த்த சிலர் உடனடியாக கட்டுபாட்டு அறைக்கு கொடுத்த தகவலை அடுத்து விரைந்து வந்த கடலோர காவல்படை, தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை சேர்ந்து பத்திரமாக 10 நிமிடத்தில் அந்த குழந்தையை மீட்டனர். முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த குழந்தை எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்ற கூடுதல் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளதாக இரகசிய பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையில் இந்த பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்வது தொடர்கதை ஆனதால் பாலத்தின் ரோந்து வாகனங்களின் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டு இருந்ததால் தற்கொலை தொடர்பான முயற்சிகள் குறைந்திருந்தது குறி்ப்பிடத்தக்கது.

Kuwait Police | Jaber Bridge | Save Girl

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தின் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி மீட்கப்பட்டார்:

« PREV
NEXT »