BREAKING NEWS
latest

Monday, November 29, 2021

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் டிசம்பர்-1 முதல் நடைமுறையில் வருகின்ற புதுப்பிக்கப்பட்ட சர்வதேச விமானங்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவிற்கு டிசம்பர்-1,2021 முதல் செல்கின்ற சர்வதேச விமான பயணிகளுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

Image : Mumbai Airport

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் டிசம்பர்-1 முதல் நடைமுறையில் வருகின்ற புதுப்பிக்கப்பட்ட சர்வதேச விமானங்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனாவின் மரபணுமாற்ற Omicron வகை கண்டறியப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவுக்கு 1-டிசம்பர்-2021 புதன்கிழமை முதல் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கான பயண விதிமுறைகளை புதுப்பித்து இந்திய சுகாதரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது அதன் விபரங்கள் பின்வருமாறு:

பயணிகள் பயணம் மேற்கொள்ளும் முன்னரே Air-Suvidha தளத்தில் தங்களுடைய கடந்த 14 நாட்களுக்கான பயண விபரங்கள், 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனையின் எதிர்மறை(Negative) சான்றிதழ் மற்றும் உண்மையான உறுதிமொழி ஆகியவை பதிவேற்ற வேண்டும். தவறான விபரங்கள் பதிவு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். Website Link: https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration

அதேபோல் United Kingdom, South Africa, Brazil, Bangladesh,Botswana, China, Mauritius, New Zealand, Zimbabwe, Singapore, Hong Kong மற்றும் Israel உள்ளிட்ட தீவிரமான'At-Risk" பிரிவில் உட்படுத்தப்பட நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளுக்கு நிபந்தனை அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் இந்த நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகள் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவு கிடைத்த பிறகு மட்டுமே விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடிவும். முடிவு எதிர்மறையாக(Negative) இருந்தால் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும். 8 வது நாள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் அதிலும் Negative ஆக இருந்தால் சுய தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும்.

பட்டியலில் இல்லாத வளைகுடா உள்ளிட்ட மற்ற நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நாடுகளில் இருந்து வருகின்ற விமானங்களில் உள்ள 5 சதவீதம் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவார்கள். எதாவது சூழ்நிலையில் இப்படிப்பட்ட பயணிகள் யாராவது Positive என்று தெரிய வந்தால் Isolation வார்டுக்கு மாற்றப்படுவார்கள். இந்த விதிமுறைகள் கடல் மற்றும் தரைவழியாக இந்திய எல்லைகளை அடையும் நபர்களுக்கும் பொருந்தும்

வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் வருகையின் போது அல்லது வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் போது கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்களும் வகுக்கப்பட்ட நெறிமுறையின்படி சோதனை மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

Image credit: Moh India

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்தியாவில் கடைபிடிக்கப்படும் டிசம்பர்-1 முதல் நடைமுறையில் வருகின்ற புதுப்பிக்கப்பட்ட சர்வதேச விமானங்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »