BREAKING NEWS
latest

Sunday, October 24, 2021

இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் குவைத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்

குவைத்தில் மாரடைப்பால் இந்தியர் ஒருவர் தன்னுடைய அறையில் இறந்து கிடந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த ஜேம்ஸ் ஜேக்கப்(வயது-39)

இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் குவைத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்

குவைத்தில் இந்தியா கேரளா மாநிலம் கோட்டயம், ஈரட்டுப்பேட்டை, முன்னிலவு பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஜேக்கப்(வயது-39) இவர் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அப்பாசியாவில் உள்ள அவர் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தார்.ஜேம்ஸ் சொந்தமாக ஏசி சம்பந்தப்பட்ட வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து கொண்டிருந்தார்.முன்னர் யூசுப் அகமது அல்கானிம் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார் என்பதும் குறி்ப்பிடத்தக்கது. மரணமடைந்த ஜேம்ஸ்க்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவருடைய தந்தை பெயர் சாக்கோ ஜேக்கப் மற்றும் தாய் தெசியம்மா என்பதாகும். சட்ட நடவடிக்கைகள் முடித்து உடல் தாயகம் எடுத்துச்செல்லும் வேலைகள் நடைபெற்று வருகின்றது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் குவைத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்

« PREV
NEXT »