BREAKING NEWS
latest

Wednesday, September 22, 2021

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் 1,004 டிராமாடோல் மாத்திரைகளுடன் இந்தியர் கைது செய்யப்பட்டார்

குவைத்தில் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளுடன் விமான நிலையத்தில் இந்தியர் கைது செய்யப்பட்டார்

Image : Kuwait Police

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் 1,004 டிராமாடோல் மாத்திரைகளுடன் இந்தியர் கைது செய்யப்பட்டார்

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இந்தியாவில் இருந்து வந்திறங்கிய இந்தியர் ஒருவரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்தனர். இந்நிலையில் அவருடைய உடமைகளின் உள்ளே மறைத்து வந்திருந்த தடைசெய்யப்பட்ட போதை மாத்திரை பட்டியலில் உள்ள 1,004 டிராமாடோல் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் கூடுதல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இவர் திங்கள்கிழமை மாலையில் கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட குவைத்-இந்தியா விமான சேவைகள் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்கியுள்ள நிலையில் இந்தியர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த செய்தியை குவைத் தினசரி பத்திரிகைகளும் செய்தியாக வெளியிடுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் சர்வதேச விமான நிலையத்தில் 1,004 டிராமாடோல் மாத்திரைகளுடன் இந்தியர் கைது செய்யப்பட்டார்

« PREV
NEXT »