BREAKING NEWS
latest

Saturday, September 18, 2021

குவைத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இது மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

குவைத்தின் வடகிழக்கில் இன்று 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது

Image : அதிகாரப்பூர்வ அமைச்சகம்

குவைத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இது மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

குவைத்தில் இன்று(19/09/21) சனிக்கிழமை தேசிய நில அதிர்வு வலையமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் நாட்டின் வடகிழக்கில் ரவ்தடைன்(Rawdatain) பகுதியில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:18 மணிக்கு நிலத்தடியில் 7 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இது மூன்றாவது முறையாக சிறிய அளவிலான நிலநடுக்கம் நாட்டில் தொடர்ந்து பதிவாகியுள்ளன. கடந்த ஆகஸ்டு-23,2021 நாட்டின் தென்மேற்கில் Manaqeesh பகுதியல் ரிக்டர் அளவுகோலில் 2.9 அளவிலான நிலநடுக்கமும், அதேபோல் இதே ஆகஸ்டு-02,2021 அன்று அதே Manaqeesh பகுதியல் ரிக்டர் அளவுகோலில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூக்கத்தில் இருந்ததால் யாரும் உணர்ந்திருக்க வாய்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இது மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

« PREV
NEXT »