BREAKING NEWS
latest

Monday, August 2, 2021

குவைத்தில் தமிழக இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் தமிழக இளைஞர் ஒருவர் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த துயரமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது

Image : உயிரிழந்த பாலாஜி(வயது-24)

குவைத்தில் தமிழக இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் தமிழக இளைஞர் ஒருவர் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த துயரமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. உயிரிழந்தவர் இந்தியா,தமிழகம், கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியை சேர்ந்த பாலாஜி(வயது-24) என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த பாலாஜியின் தந்தை பெயர் துரை என்பதாகும். பாலாஜிக்கு நேற்று(31/07/21) முன்தினம் அதாவது சனிக்கிழமை இரவு திடிரென மாரடைப்பு ஏற்பட்டது, இதன் காரணமாக அவர் உயிரிழந்தார். குவைத்தின் Almeer Company-யில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை செய்து வந்தார். சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில் உடல் நாளை(03/08/21) செவ்வாய்க்கிழமை தாயகம் எடுத்துச் செல்லப்படுகிறது எனவும், இதற்கான அணைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக கம்பெனி நிர்வாகமே மேற்கொண்டனர் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழக இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »