BREAKING NEWS
latest

Friday, August 13, 2021

குவைத்தில் பச்சிளம் குழந்தையின் தாய் மாரடைப்பால் இன்று உயிரிழந்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் 6 மாத குழந்தையின் தாய் மாரடைப்பால் உயிரிழந்த பெரும் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த ஹிபா(வயது-26)

குவைத்தில் பச்சிளம் குழந்தையின் தாய் மாரடைப்பால் இன்று உயிரிழந்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் Hawally பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் ஹிபா(வயது-26) இன்று(12/08/21) வியாழக்கிழமை தன்னுடைய குடியிருப்பில் உள்ள கழிவறைக்கு சென்ற நிலையில் திடிரென மயங்கிய கீழே விழுந்தார், தொடர்ந்து நடந்த பரிசோதனையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்த ஹிபா அவர்களின் கணவர் பெயர் அப்சல்,இவர் ஏடிசி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகின்றார். இந்த தம்பதியினர் இந்தியா,கேரளா மாநிலம், கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள், உயிரிழந்த ஹிபாவுக்கு பெண் குழந்தை பிறந்து 6 மாதங்கள் மட்டுமே ஆனநிலையில் இந்த துயரமான சம்பவம் இன்று நடந்ததுள்ளது. மேலும் இந்த செய்தி குவைத்திலுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. உடல் அல்-ஜாபிரியா முபாரக் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு உடல் நல்லடக்கம் குவைத்திலேயே நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பச்சிளம் குழந்தையின் தாய் மாரடைப்பால் இன்று உயிரிழந்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

« PREV
NEXT »