BREAKING NEWS
latest

Saturday, July 31, 2021

சவுதியில் கோவிட் காரணமாக இந்திய தாயும் மற்றும் அவருடைய பச்சிளம் குழந்தையும் உயிரிழந்தது

சவுதி அரேபியாவில் கோவிட் காரணமாக இந்தியாவை சேர்ந்த தாயும் மற்றும் அவருடைய பிறந்த குழந்தை உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த காதா(வயது-27)

சவுதியில் கோவிட் காரணமாக இந்திய தாயும் மற்றும் அவருடைய பச்சிளம் குழந்தையும் உயிரிழந்தது

சவுதி அரேபியாவில் கோவிட் காரணமாக இந்தியாவை சேர்ந்த தாயும் மற்றும் அவருடைய பிறந்த குழந்தை உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி காதா(வயது-27) ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவிட் மூலம் பாதிக்கப்பட்ட அவர் தாமாம் அருகிலுள்ள கத்தீப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமடைந்ததால், பெண் குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். அனால் காதா உயிரிழந்தார், தொடர்ந்து சிறிது நேரத்தில் குழந்தையும் இறந்தது. விசிட் விசாவில் கடந்த சில மதங்களுக்கு முன்பு சவுதிக்கு வந்த அவர் கணவருடன் மீண்டும் தாயகம் திரும்பத் தயாரான நிலையில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குவைத்தில் கர்ப்பமாக இருந்த இந்தியாவை சேர்ந்த தாயும் குழந்தையும் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் மற்றோரு துயரமான செய்தி சவுதியில் இருத்து இன்று வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் கோவிட் காரணமாக இந்திய தாயும் மற்றும் அவருடைய பச்சிளம் குழந்தையும் உயிரிழந்தது

« PREV
NEXT »