BREAKING NEWS
latest

Wednesday, July 21, 2021

குவைத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் தமிழர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்

Image : உயிரிழந்த பூதலிங்கம்

குவைத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் கடந்த பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த இந்தியா,தமிழகம் ,கன்னியாகுமரி மாவட்டம், கிருஷ்ணன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பூதலிங்கம்(வயது-40), இவர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக இங்குள்ள மிஷரப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. உயிரிழந்த பூதலிங்கம் அவர்கள் மனைவி மற்றும் மகனுடன் குடும்பமாக குவைத்தில் வசித்து வந்தார். இவர் KNPC-யில் வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கொரோனா விதிமுறைக்கு இணங்க உடல் சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு இன்று(20/07/21) செவ்வாய்க்கிழமைகுவைத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.மேலும் உயிரிழந்த பூதலிங்கம் அவர்கள குவைத்தில் இயங்குகி வருகின்ற "குவைத் சங்கத்தமிழ் கலைமன்றத்தின்" செயற்குழு உறுப்பினர் அவார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »