BREAKING NEWS
latest

Sunday, June 27, 2021

ஓமானில் கொரோனாவுக்கு தாய் மற்றும் இரட்டை குழந்தைகள் பலி

ஓமானில் தாய் மற்றும் பிறந்த இரட்டை பச்சிளம் குழந்தைகளும் கொரோனா காரணமாக உயிரிழந்தது

Image : பதிவுக்காக மட்டும

ஓமானில் கொரோனாவுக்கு தாய் மற்றும் இரட்டை குழந்தைகள் பலி

ஓமானில் இளம் பெண்ணும் அவரது இரண்டு பிறந்த பச்சிளம் குழந்தைகளும் கோவிட் வைரஸின் பாதிப்புக்கு ஆளான நிலையில் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது. ஹசன் அல்-ஹாஷ்மி என்பவரின் மனைவி ஐடா(வயது-39) மற்றும் அவர்களது இரட்டையர்களான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்று 3 பேரும் உயிரிழந்தனர்.

சுகாதரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவிட் மூலம் பாதிக்கப்பட்ட தாயின் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் பிரசவத்தின்போது மரணம் ஏற்பட்டது எனவும், கோவிட் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து தனது குழந்தைகளுக்கு வைரஸை பரவியது எனவும் தெரிவித்துள்ளனர். இந்த துயரமான நிகழ்வை தொடர்ந்து நாட்டில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கணவர் சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமானில் கொரோனாவுக்கு தாய் மற்றும் இரட்டை குழந்தைகள் பலி

« PREV
NEXT »