BREAKING NEWS
latest

Saturday, June 5, 2021

சவுதியில் நடந்த இரண்டு சாலை விபத்தில் 2 செவிலியர்கள் உட்பட 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்

சவுதியில் நடந்த சாலை விபத்தில் 2 செவிலியர்கள் உட்பட 3 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த இந்தியர்கள்

சவுதியில் நடந்த இரண்டு சாலை விபத்தில் 2 செவிலியர்கள் உட்பட 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்

சவுதியின் நஜ்ரானில் வைத்து நடந்த சாலை விபத்தில் இரண்டு இந்திய செவிலியர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஷின்சி பிலிப்(வயது-28) மற்றும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஸ்வதி விஜயன்(வயது-31) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவருமே நஜ்ரான் கிங் காலித் மருத்துவமனையின் செவிலியர்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் பயணம் செய்த வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் பயங்கரமாக மோதியதில் இந்த துயரமான விபத்து ஏற்பட்டது.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு செவிலியர்களான சினேகா மற்றும் ரின்ஸி ஆகியோரும் நஜ்ரான் ஜெனரல் மருத்துவமனையிலும், ஓட்டுநரான அஜித் நஜ்ரானும் கிங் காலித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். வாகனத்தில் இருந்த அனைவருமே இந்தியர்கள் ஆவார்கள். மேலும் உயிரிழந்த இரண்டு செவிலியர்களின் உடல்கள் நஜ்ரானில் உள்ள தார் ஜெனரல் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. சவுதியில் உள்ள யுனைடெட் செவிலியர் சங்கத்தின் பிரதிநிதிகள் கூடுதல் சட்ட நடவடிக்கைகள் முடித்து உடலை தாயகம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் ஜித்தா சாலையிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்கொய்தாவில் நடந்த டிரெய்லர் விபத்தில் கேரளா மாநிலம் பாலக்காடு,சலவரா பகுதியை சேர்ந்த முகமது பஷீர்(வயது-44) உயிரிழந்தார். ரியாத்தில் இருந்து ஜித்தா செல்லும் வழியில் அல்கொய்தாவில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தன்னுடைய கம்பெனி இடமாறுதல் அளித்த நிலையில் அங்கு செல்வதற்காக நிறுவனத்திற்கு சொந்தமான டிரெய்லரில் அவரது கார் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜித்தாவுக்கு புறப்பட்டார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக செல்லும் வழியில்,அவர் பயணித்த டிரெய்லர் மார்பிள்கள் ஏற்றிச்சென்ற மற்றொரு டிரெய்லருடன் மோதி பயங்கரமாக தீப்பிடித்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய முகமது பஷீர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கடந்த 18 ஆண்டுகளாக ரியாதில் பணியாற்றி வந்தார். இந்த விபத்தில் இலங்கை நாட்டை சேர்ந்த ஓட்டுநரும் படுகாயமடைந்தார்.பஷீரின் உடல் ரியாத்தில் நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை நிறுவன பிரதிநிதி மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் நடந்த இரண்டு சாலை விபத்தில் 2 செவிலியர்கள் உட்பட 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்

« PREV
NEXT »