BREAKING NEWS
latest

Tuesday, May 25, 2021

குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்கள் மீதான தடையை நீக்கிய பின்னர் முதல் குழுவினர் விமான நிலைய‌ம் வந்தடைந்தனர்

குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்கள் மீதான தடையை நீக்கிய பின்னர் முதல் குழுவினர் குவைத் சர்வதேச விமான நிலைய‌ம் வந்தடைந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது

Image : Arrival On Kuwait Airport

குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்கள் மீதான தடையை நீக்கிய பின்னர் முதல் குழுவினர் விமான நிலைய‌ம் வந்தடைந்தனர்

குவைத்திற்கு வீட்டு தொழிலாளர்களின் முதல் குழுவினர் பிலிப்பைன்ஸிலிருந்து குவைத்திற்கு சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர். வீட்டுத் தொழிலாளர்களை குவைத்துக்கு அனுப்புவதற்கான தடையை பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ள தொழிலாளர் துறை அமைச்சகம் நீக்கிய பிறகு இந்த முதல் குழுவினர் குவைத்திற்கு வந்துள்ளனர். வருகை தந்துள்ள பெண்தொழிலாளர்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பாஷம்-அல்-ஷம்மாரி தெரிவித்தார். பிலிப்பைன்ஸிலிருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை குவைத் ஏர்வேஸ் இரட்டிப்பாகும்போது,வரும் நாட்களில் அதிகமான தொழிலாளர்கள் குவைத் வருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த குழுவினர் நேற்றே(24/05/21) குவைத் வந்தடைந்த நிலையில் இன்று இது தொடர்பாக செய்தி வெளியாகியுள்ளது. தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் ஒப்பிடும்போது பிலிப்பைன்ஸ் இப்போது அனுப்ப அனுமதிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று அல்-ஷம்மாரி உறுதிப்படுத்தினார், இந்த தொழிலாளிகள் நாட்டிற்கு வந்ததிலிருந்து ஒப்பந்த காலத்தின் இறுதி வரை அவர்களின் முழு உரிமைகளையும் பாதுகாத்தல் என்பது தங்களுடைய பொறுப்பாகும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்கள் மீதான தடையை நீக்கிய பின்னர் முதல் குழுவினர் விமான நிலைய‌ம் வந்தடைந்தனர்

« PREV
NEXT »