BREAKING NEWS
latest

Saturday, May 29, 2021

அமீரகத்தில் இந்திய பெண் ஒரவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்

அமீரகத்தில் இந்திய பெண் ஒரவர் இன்று கடலில் மூழ்கிய பரிதாபமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image credit: உயிரிழந்த ரபிஸா(வயது-32)

அமீரகத்தில் இந்திய பெண் ஒரவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்திய பெண் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் இந்தியா,கேரளா மாநிலம், கோழிக்கோடு, பந்திரன்காவு பகுதியை ரபிஸா மஹ்ரூப்(வயது-32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உம் அல் குவைன் பீச் ஹோட்டல் அருகே இந்த துயரமான விபத்து நடந்துள்ளது. உடல் உம் அல்-குவைன் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த துயரமான சம்பவம் குறித்த கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. கணவரும்,குழந்தைகளும் நீரில் மூழ்கியபோது ரபிஸா அவர்களை காப்பாற்ற முயற்ச்சி செய்தார். இந்த சம்பவம் இன்று(28/05/21) வெள்ளிக்கிழமை காலை நடந்தது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. ரபிஸா அவரது குடும்பத்தினரும் அஜ்மானில் வசிக்கின்றனர். ரஃப்சாவின் கணவர் மஹ்ரூப் ஷார்ஜா எடிசலாட் தொலைதொடர்பு துறையில் தொழில்நுட்ப வல்லுநரான வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு எட்டு மற்றும் நான்கு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சட்ட நடவடிக்கைகள் முடித்து உடலை திருப்பி தாயகம் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அமீரகத்தில் இந்திய பெண் ஒரவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்

« PREV
NEXT »