BREAKING NEWS
latest

Friday, April 9, 2021

குவைத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சற்றுமுன் அவசரமாக தரையிறக்கப்பட்டது

குவைத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சற்றுமுன் அவசரமாக தரையிறக்கப்பட்டது;அதிஷ்டவசமாக பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை

Image : அவசரமாக தரையிறங்க விமானம்

குவைத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சற்றுமுன் அவசரமாக தரையிறக்கப்பட்டது

கேரளாவின் கரிப்பூரில்(கோழிக்கோடு) இருந்து இந்திய நேரப்படி காலை 08:37 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அவசரகால அடிப்படையில் மீண்டும் தரையிறக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. விமானம் குவைத் நோக்கி புறப்பட்டு சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு அதாவது 9:11 மணியளவில் மீண்டும் கரிப்பூரில் தரையிறங்கியது. விமான பணியாளர்கள் மற்றும் பயணிகள் உட்பட 17 பேர் மட்டுமே விமானத்தில் இருந்தனர் என்ற முதல்கட்ட தகவலும் வெளியாகியுள்ளது.

விமானத்தில் தீ விபத்து தொடர்பான அடையாளம் காட்டும் அலாரம் எழுந்த நிலையில் விமானம் தரையிறங்கியதாக கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. கூடுதல் பிரச்சனைகள் எதுவும் விமானத்தில் ஏற்பட்டுள்ளதாக தகவல் எதுவும் வெளியிடவில்லை. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது. பிரச்சனை எதுவும் இல்லை என்பது உறுதி செய்தபிறகு மீண்டும் விமானம் புறப்படும் என்று சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சற்றுமுன் அவசரமாக தரையிறக்கப்பட்டது

« PREV
NEXT »