BREAKING NEWS
latest

Thursday, April 22, 2021

ஓமானில் இந்தியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது;சுப்ரீம் க‌மிட்டி அதிகாரப்பூர்வமாக உத்தரவு வெளியிட்டுள்ளது

ஓமானில் இந்தியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது;இது தொடர்பான அறிவிப்பை சுப்ரீம் க‌மிட்டி அதிகாரப்பூர்வமாக உத்தரவு வெளியிட்டுள்ளது

Image: Beautiful Oman

ஓமானில் இந்தியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது;சுப்ரீம் க‌மிட்டி அதிகாரப்பூர்வமாக உத்தரவு வெளியிட்டுள்ளது

ஓமானில் ஏப்ரல் 24 முதல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து வருகின்ற ஓமான் சுப்ரீம் க‌மிட்டி அதிகாரப்பூர்வமாக உத்தரவு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஏப்ரல்-24,2021 முதல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் ஓமானுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் க‌மிட்டி முடிவை மேற்கோள்காட்டி ஓமான் செய்தி நிறுவனம் நேற்று(21/04/21) புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

அதுபோல் இந்த புதிய முடிவு ஏப்ரல்-24 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரை இந்த முடிவு நடைமுறையில் இருக்கும். இருப்பினும், ஓமானி குடிமக்கள், தூதுவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமானில் இந்தியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது;சுப்ரீம் க‌மிட்டி அதிகாரப்பூர்வமாக உத்தரவு வெளியிட்டுள்ளது

« PREV
NEXT »