BREAKING NEWS
latest

Monday, April 5, 2021

குவைத்தில் தமிழக இளைஞர் மரணமடைந்தார்;உடல் இன்று தாயகம் செல்கிறது

குவைத்தில் இந்திய தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திடிரென மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image: உயிரிழந்த மாணிக்கராஜன்(வயது-34)

குவைத்தில் தமிழக இளைஞர் மரணமடைந்தார்;உடல் இன்று தாயகம் செல்கிறது

குவைத்தில் வேலைக்காக வந்தவர் இந்தியா, தமிழகம் திருவாரூர் மாவட்டம், தேவர்-கண்டநல்லூர், குளிக்கரை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கராஜன்(வயது-34). இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை(31/03/21) திடிரென மரணமடைந்தார். குவைத் சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட நிலையில் இன்று(05/04/21) மாலையில் சுமார் 7 மணியளவில் அல்-ஜசிரா விமானம் மூலம் உடல் தாயகம் எடுத்துச் செல்லப்படுகின்றது .இந்திய நேரப்படி நாளை(06/04/21) அதிகாலையில் 02:30 மணியளவில் சென்னை விமான நிலையம் சென்றடையும் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்யப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக உதவிகளை மக்கள் சேவை மைய நிர்வாகிகள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழக இளைஞர் மரணமடைந்தார்;உடல் இன்று தாயகம் செல்கிறது

« PREV
NEXT »