BREAKING NEWS
latest

Tuesday, April 20, 2021

குவைத்தில் வேலை செய்துவந்த இரண்டு இந்தியர்கள் உடல்நலக்குறைவு காரணங்களால் உயிரிழந்தனர்

குவைத்தில் வேலை செய்துவந்த இரண்டு இந்தியர்கள் உடல்நலக்குறைவு காரணங்களால் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த முகமது மற்றும் ஆஷா

குவைத்தில் வேலை செய்துவந்த இரண்டு இந்தியர்கள் உடல்நலக்குறைவு காரணங்களால் உயிரிழந்தனர்

குவைத்தில் வேலை செய்துவந்த இந்திய இளைஞர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவர் இந்தியா,கேரளா மாநிலம் மலப்புரம்,பெருந்தல்மண்ணு பகுதியை சேர்ந்த ஷாபின் முகமது(வயது-33) என்பது தெரியவந்தது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.குவைத் தேசிய பெட்ரோலியம் நிறுவனத்தின் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஷரிகா என்ற மனைவியும் இனாரா என்ற மகளும் உள்ள நிலையில் குடும்பத்துடன் ஷாபின் குவைத்தில் வசித்து வந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதுபோல் குவைத்தில் வேலை செய்துவந்த இந்திய செவிலியர் ஆஷா(வயது-39). உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக இந்தியா திரும்பிய நிலையில் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் இந்நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. உயிரிழந்த ஆஷா அவர்களின் சொந்த ஊர் கேரளா மாநிலம், பத்தனம்திட்டா, நெடுமன்காவு என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. இவருடைய கணவர் பெயர் பிஜு டேனியல் ஆகும்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வேலை செய்துவந்த இரண்டு இந்தியர்கள் உடல்நலக்குறைவு காரணங்களால் உயிரிழந்தனர்

« PREV
NEXT »