BREAKING NEWS
latest

Monday, March 15, 2021

குவைத்தில் இந்திய பெண்மணி தன்னை முதலாளி கற்பழித்ததாக காவல் நிலையில் புகார் அளித்துள்ளார்

குவைத்தில் இந்திய பெண்மணி தன்னை முதலாளி கற்பழித்ததாக காவல் நிலையில் புகார் அளித்துள்ளார்;இது தொடர்பான சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்

குவைத்தில் இந்திய பெண்மணி தன்னை முதலாளி கற்பழித்ததாக காவல் நிலையில் புகார் அளித்துள்ளார்

குவைத்தில் Sponsor(குவைத்தி) பாலைவனத்திற்கு அழைத்துச் சென்று கற்பழித்ததாக இந்தியவைச் சேர்ந்த வீட்டு பணிப்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அவர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் Sponsor(குவைத்தி) தன்னை மக்கள் நடமாட்டமே இல்லாத பாலைவன பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும், உயிருக்கு பயந்து என்னால் அந்த நேரத்தில் எதுவும் செய்ய முடியவில்லை என்றார். மேலும் சம்பவம் நடந்த பிறகு தன்னை அரபி தனது வீட்டிற்கே அழைத்துச் சென்றார் எனவும்,பின்னர் தான் அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தேன் எனவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்மணி Jahra கவர்னரேட்டில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்மணியும் அதே பகுதியில் மேற்குறிப்பிட்ட அரபி வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக செய்தியை குவைத் தினசரி நாளிதழ் நேற்று(14/03/21) இரவு செய்தியாக வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது புகார் அளித்த பெண்மணி இந்தியாவை சேர்ந்தவர், மேலும் இந்த சம்பவம் குவைத் நாட்டின் சட்டத்தை மீறிய செயல் எனவும்,அவர் மீது கிரிமினல் வழக்கைப் பதிவுசெய்து குற்றவியல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும். இதையடு்த்து ஸ்பான்சரை(குவைத்தியை) அதாகாரிகள் கைது செய்து,அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Kuwait Police | Indian Housemaid | Sponsor Arrested

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்திய பெண்மணி தன்னை முதலாளி கற்பழித்ததாக காவல் நிலையில் புகார் அளித்துள்ளார்

« PREV
NEXT »