BREAKING NEWS
latest

Saturday, February 13, 2021

குவைத்தில் கொரோனா காரணமாக 27-வயது இந்திய இளைஞர் உயிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் கொரோனா காரணமாக 27-வயது இந்திய இளைஞர் உயிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது;இளம் வயதில் அவர் உயிரிழந்த செய்தி குவைத் இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Image : உயிரிழந்த ஆபிரகாம்(வயது- 27)

குவைத்தில் கொரோனா காரணமாக 27-வயது இந்திய இளைஞர் உயிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் கோவிட் சிகிச்சை பெற்று வந்த இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவர் கேரளா மாநிலம் கோட்டயம், மணிமாலா, கடைனிகாட் பகுதியை சேர்ந்த பிலிப் மற்றும் வல்சம்மா தம்பதிகளின் மகன் ஆபிரகாம்(வயது- 27) என்பது தெரியவந்துள்ளது. இவர் குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக அதான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய உடல் நல்லடக்கம் இன்று(13/02/21) சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் சுலேபியா கல்லறை தோட்டத்தில் வைத்து நடைபெறும். இளம் வயதில் அவர் உயிரிழந்த செய்தி குவைத் இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கொரோனா காரணமாக 27-வயது இந்திய இளைஞர் உயிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »