BREAKING NEWS
latest

Thursday, February 25, 2021

சவுதியில் சொந்த நாட்டவரை கொலை செய்த வழக்கில் மற்றொரு நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது

சவுதியில் சொந்த நாட்டவரை கொலை செய்த வழக்கில் மற்றொரு நபருக்கு இன்று வியாழக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது

Image:செய்தி பதிவுக்காக மட்டுமே

சவுதியில் சொந்த நாட்டவரை கொலை செய்த வழக்கில் மற்றொரு நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது

சவுதியில் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கு ஜித்தாவில் வைத்து இன்று(25/02/21) வியாழக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் ஏமன் நாட்டை சேர்ந்த பிஷர் ஹதிம் அதானி என்ற நபருக்கு,அதை நாட்டை சேர்ந்த ஜிகாத் அல் சயீத்தை கொலை செய்த குற்றத்திற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. இதில் குற்றவாளி கொலை செய்யப்பட்ட நபரை மர்ம உறுப்பில் பயங்கரமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என கண்டறியப்பட்டது இதையடுத்து குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து இன்று வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் சொந்த நாட்டவரை கொலை செய்த வழக்கில் மற்றொரு நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது

« PREV
NEXT »