BREAKING NEWS
latest

Tuesday, February 23, 2021

உலகெங்கிலும் உள்ள பத்து நாடுகளை சேர்ந்தவர்கள் ஓமானில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது

உலகெங்கிலும் உள்ள பத்து நாடுகளை சேர்ந்தவர்கள் ஓமானில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது;இந்த புதிய உத்தரவு வியாழக்கிழமை அதிகாலை 12:00 மணிக்கு(உள்ளூர் நேரம்) அமல்படுத்தப்படும்

Image : Beautiful Oman

உலகெங்கிலும் உள்ள பத்து நாடுகளை சேர்ந்தவர்கள் ஓமானில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது

உலகெங்கிலும் உள்ள பத்து நாடுகளின் குடிமக்கள் ஓமானில் நுழைய தடை விதிக்கப்பட்டது. கொரோனா வைரஸின் பரவலின் விளைவாக ஏற்பட்ட முன்னேற்றங்களைக் கையாள்வதற்கான மற்றும் வழிமுறையை ஆராய்வதற்கான பொறுப்புள்ள அம‌ர்வு குழுவின் முடிவின் அடிப்படையில் ஓமான் செய்தி நிறுவனம் ஒரு செய்தி அறிக்கையில் இந்த முடிவை வெளியிட்டுள்ளது. செய்தியில் லெபனான், சூடான், தென்னாப்பிரிக்கா, பிரேசில், நைஜீரியா, தான்சானியா, கினியா, கானா, சிரியா, லியோன் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த குடிமக்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் பரவியுள்ள மரபணு மாற்றப்பட்ட கோவிட் வைரஸ் பரவுவதற்கான முன்னெச்சரிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.15 நாட்களுக்கு இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய உத்தரவு வியாழக்கிழமை அதிகாலை 12:00 மணிக்கு(உள்ளூர் நேரம்) அமல்படுத்தப்படும் என்றும், இந்த நாடுகளில் இருந்து வருகின்ற ஓமன் குடிமக்கள், இராஜந்திர பிரதிநிதிகள்,சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும், இதுபோல் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வரவிருக்கும் காலகட்டத்தில் தேவையில்லாத பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அமர்வு குழு வலியுறுத்தியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to உலகெங்கிலும் உள்ள பத்து நாடுகளை சேர்ந்தவர்கள் ஓமானில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »