BREAKING NEWS
latest

Monday, February 22, 2021

குவைத்தில் தமிழக நபர் மாரடைப்பால் மரணமடைந்தார்;உடல் குவைத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் தமிழக நபர் மாரடைப்பால் மரணமடைந்தார்;சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட நிலையில் உடல் குவைத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Image : உயிரிழந்த ஹஜ்ஜி முஹம்மது(வயது:46)

குவைத்தில் தமிழக நபர் மாரடைப்பால் மரணமடைந்தார்;உடல் குவைத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் வேலை செய்து வந்த இந்தியா,காரைக்கால்(பாண்டிச்சேரி),குமரக் குடிதெரு-1,சேத்தூர் பகுதியை சேர்ந்த ஹஜ்ஜி முஹம்மது(வயது:46) என்பவர் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவருடைய தந்தை பெயர் முஹம்மது உசேன். இவர் குவைத்தில் பயான் பகுதியில் ஓட்டுனராக வேலை செய்து வந்தவர்.இந்நிலையில் நேற்று(20-02-2021) முன்தினம் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் முபாரக் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார்.

இதையடு்த்து குவைத் சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட நிலையில்,நேற்று(21-2-2021) அஸர் தொழுகைக்கு முன்பு மதியம் 2.30 மணிக்கு குவைத் சுலைபிஹாத் மையவாடியில், நல்லடக்கம் செய்யப்பட்டது.முஹம்மது ஹஜ்ஜி அவர்களின் உடல் நல்லடக்கம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் குவைத் மக்கள் சேவை மைய நிர்வாகிகள் துரிதமாக செய்தனர் என்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழக நபர் மாரடைப்பால் மரணமடைந்தார்;உடல் குவைத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

« PREV
NEXT »