BREAKING NEWS
latest

Thursday, January 28, 2021

இலங்கையில் இருந்து 197 வீட்டுத் தொழிலாளர்களுடன் முதல் விமானம் குவைத் வந்துள்ளதாக தகவல்

இலங்கையில் இருந்து 197 வீட்டுத் தொழிலாளர்களுடன் முதல் விமானம் குவைத் வந்துள்ளதாக தகவல்;இந்த தகவலை குவைத் தினசரி நாளிதழ் மாலையில் செய்தியாக வெளியிட்டுள்ளது

Image credit: Kuwait Airways

இலங்கையில் இருந்து 197 வீட்டுத் தொழிலாளர்களுடன் முதல் விமானம் குவைத் வந்துள்ளதாக தகவல்

இலங்கையில் இருந்து இன்று(28/01/2021) வியாழக்கிழமை காலையில் வீட்டுத் தொழிலாளர்களுடன் முதல் குவைத் ஏர்வேஸ் விமானம்,குவைத் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.வீட்டுத் தொழிலாளர்களை அழைத்துவர அறிமுகம் செய்யப்பட்ட தளத்தில் பதிவு செய்யப்பட்டவர்களில் இருந்து முதல்கட்டமாக இந்த 197 வீட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு வந்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.<\p>

இலங்கையிலிருந்து குவைத்துக்கு வரும் வீட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒதுக்கீட்டை ஏற்படுத்துவது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இலங்கை பிரதிநிதியுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. எனவே இலங்கை விமான நிறுவனங்களில் ஒன்று வீட்டுப் பணியாளர்களை அழைத்துவரும் ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபடும் என்று தெரிகிறது. இலங்கையில் இருந்து இரண்டாவது விமானம் பிப்ரவரி,8-ஆம் தேதி புறப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தகவலை குவைத் தினசரி நாளிதழ் மாலையில் செய்தியாக வெளியிட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இலங்கையில் இருந்து 197 வீட்டுத் தொழிலாளர்களுடன் முதல் விமானம் குவைத் வந்துள்ளதாக தகவல்

« PREV
NEXT »