BREAKING NEWS
latest

Thursday, January 21, 2021

குவைத்துக்கு வரும் பயணிகள் கூடுதலான 50 தினார்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

குவைத்துக்கு வரும் ஒவ்வோரு பயணிகளும் கூடுதலான 50 தினார்கள் கட்டணம் விமான பயணச்சீட்டுடன் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

குவைத்துக்கு வரும் பயணிகள் கூடுதலான 50 தினார்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

குவைத்திற்கு பயணிகள் வருகைக்கான பி.சி.ஆர் சோதனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று குவைத் அமைச்சரவையின் சமீபத்திய முடிவின்படி, குவைத் விமான நிலையத்தில் இருந்து இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கு குவைத்துக்கு வருகை தரும் பயணிகள் அனைவருக்கும் நடத்தபடும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் விலையைச் சேர்த்து வசூலிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது.

இது தொடர்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு பி.சி.ஆர் பரிசோதனைக்காக 25 தினார்கள் ஆரம்ப விலையை நிர்ணயித்துள்ளது. இதனால் இரண்டு சோதனைகள் 50 தினார்கள் மொத்தம் செலுத்த வேண்டியது இருக்கும். முதல் சோதனை வருகையின் போதும், 7 நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்குப் பிறகு இரண்டாவது பரிசோதனை செய்யப்படும். மேலும் பி.சி.ஆர் கட்டணங்கள் இரண்டும் குவைத்துக்கு வரும் பயணிகளின் டிக்கெட்டில் சேர்க்கப்படும் என்று அல் ராய் தினசரி தெரிவித்துள்ளது. குவைத் சுகாதார அமைச்சின் மீது சுமையை அதிகரிக்கக்கூடாது என்பதற்காக உள்ளூர் தனியார் துறையால் பரிசோதனை பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிகின்றது.

Kuwait Airport | Travelling Kuwait | Indians Kuwait

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்துக்கு வரும் பயணிகள் கூடுதலான 50 தினார்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

« PREV
NEXT »