BREAKING NEWS
latest

Saturday, January 2, 2021

சவுதியில் இன்று தீ விபத்து மூன்று குழந்தைகள் பலி: நான்கு பேர் படுகாயமடைந்தனர்


சவுதி அரேபியாவின் ஜிஷான் அடுத்த அபு அரிஷில் ஒரு வீட்டில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்,மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். மூன்று சிறுவர்களுக்கும் எட்டு மற்றும் இரண்டு வயதுக்கும் இடையில் உள்ளவர்கள். இதில் இரண்டு சிறுவர்களும் ஒரு சிறுமியும் அடங்கும், கிங் பைசல் சாலைக்கு மிக அருகிலுள்ள உள்ள வீட்டில் இந்த விபத்து நடந்துள்ளது. மேலும் இந்த தீவிபத்து நடந்த நேரத்தில் வீட்டில் இருந்த தாய் மற்றும் மூன்று குழந்தைகளும் படுகாயமடைந்தனர்.

இறந்த மூன்று குழந்தைகளும் அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனநலம் பாதித்த குழந்தைகள் என்பதால் வீட்டை விட்டு வெளியேறலாம் என்ற அச்சத்தில் சங்கிலியால் இப்படி கட்டி வைக்கப்பட்டு இருந்ததாக தந்தை கூறினார். தீ விபத்துக்கான காரணம் தெளிவாக இல்லை. இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் இன்று தீ விபத்து மூன்று குழந்தைகள் பலி: நான்கு பேர் படுகாயமடைந்தனர்

« PREV
NEXT »