BREAKING NEWS
latest

Wednesday, December 30, 2020

கத்தாரில் முகமூடி அணியாததால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கத்தாரில் நேற்று(29/12/20) செவ்வாயன்று, கோவிட் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக,  அரசு அறிவித்துள்ள கட்டாய முகமூடி அணியாமல் வெளியே வந்ததாக 91 பேர் கைது செய்யப்பட்டனர். மேலாதிக்க நடவடிக்கைகளுக்காக உள்துறை அமைச்சக அதிகாரிகள் அவர்களை Public Prosecution-யிடம் ஒப்படைத்தனர்.

கத்தாரில் இதுவரை, 4291 பேர் முகமூடி அணியவில்லை என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை(விதிமுறைகளை) மீறி வாகனங்களில் பயணம் செய்ததற்காக மொத்தம் 252 பேர் கைது செய்யப்பட்டனர். 

அதிகமாக ஓட்டுநர் உட்பட நான்கு பேர் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும் வாகனத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோவிட் வைரஸ் பரவாமல் தடுக்க நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அனைத்து நாட்டினரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கோரியுள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to கத்தாரில் முகமூடி அணியாததால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

« PREV
NEXT »