BREAKING NEWS
latest

Thursday, December 24, 2020

சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களில் கோடிகள் மதிப்புள்ள தங்கக் குவியலை பறிமுதல் செய்தனர்

Dec-24,2020

துபாயிலிருந்து 6E66 விமானத்தில் இன்று வந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.50.54 லட்சம் மதிப்புள்ள 980 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.இதை பயணி ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தார், தொடர்ந்து பயணி கைது செய்யப்பட்டார்.

மேலும் துபாயில் இருந்து வந்த 7 பயணிகளிடமிருந்து ரூ.87 லட்சம் மதிப்புள்ள 1.67 kg தங்கம் மற்றும் ரூ.9.8 லட்சம் மதிப்புள்ள 4 kg குங்குமப்பூ கைப்பற்றப்பட்டது.தங்கம் பொம்மை கார் ,ஆசனவாய்,சட்டைகை மடிப்பு ஆகியவற்றில் இருந்தும், குங்குமப்பூ உடைமையிலிருந்து கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோல் நேற்று  துபாயில் வந்த விமானத்தில் யாரோ விட்டுச்சென்ற பேக் ஒன்றும் அனாதையாக கிடந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் அதை பரிசோதனை செய்தனர். இதில் 486 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களில் கோடிகள் மதிப்புள்ள தங்கக் குவியலை பறிமுதல் செய்தனர்

« PREV
NEXT »