BREAKING NEWS
latest

Tuesday, December 1, 2020

குவைத்தில் தமிழர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்:

குவைத்தில் தமிழர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்:

Dec-1,2020

குவைத்தில் வேலை செய்து வந்த இந்திய தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்தியில் அவர்  நாமக்கல் மாவட்டம், இரத்தினபுரம், வேப்பநத்தம் புதூர் எனும் ஊரை சேர்ந்த பழனிச்சாமி(வயது-52) என்பது வேலை செய்துவந்த நிலையில் சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு Adan மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (01-12-2020) சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. பழனிச்சாமி, நாச்சியப்பன் என்பவருடைய மகன் ஆவார்

மேலும் அவரது  உடல் அவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோளின் படி தாயகம் அனுப்பும் பணிகளை ஓட்டுநர்கள் சேவை மைய அமைப்பு செய்து வருகிறது என்றும் குவைத் சட்ட நடவடிக்கை பணிகள் முடிந்தவுடன்  உடல் தாயகம் அனுப்பப்படும்  என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 




WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்:

« PREV
NEXT »