BREAKING NEWS
latest

Sunday, December 13, 2020

குவைத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

Dec-13,2020

குவைத்தில் இந்தியா, தமிழகம் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவருக்கு நேற்று முன்தினம்(11/12/2020) Salmiya பகுதியில் உள்ள அவருடைய அறையில் வைத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய அறையில் உள்ள நண்பர்கள் முதலுதவி கொடுத்து காப்பாற்ற முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை.

குவைத்தில் உள்ள பயணிகள் பேருந்து நிறுவனத்தில்(CityBus) பணியாற்றி வந்தார் என்பது குறி்ப்பிடத்தக்கது. குவைத் சட்ட நடவடிக்கைகள் முடிந்த நிலையில் இஸ்மாயில் உடல் இன்று(13/12/2020) ஞாயற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யும் நிகழ்வு நடைபெறும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியை வெளிநாடு வாழ் நலச்சங்கம் வெளியிட்டுள்ளது

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »