BREAKING NEWS
latest

Tuesday, December 22, 2020

இந்திய தூதர், குவைத்தின் தற்காலிக தடுப்பு மையத்தின் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார்

Dec-22,2020

குவைத் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் இன்று(22/12/20) செவ்வாய்க்கிழமை தற்காலிக தடுப்பு மையம் மற்றும் நாடுகடத்தல் மையம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தை பார்வையிட்டார்.

அப்போது மையத்தின் இயக்குனர் வாலிட் அலி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல் செய்தார். தொடர்ந்து தற்போதைய ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் இந்திய புலம்பெயர்ந்தோர் தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

அப்போது இந்திய தூதரகம் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக அதிகாரிகளுக்கு தூதர் நன்றி தெரிவித்தார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்திய தூதர், குவைத்தின் தற்காலிக தடுப்பு மையத்தின் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார்

« PREV
NEXT »