BREAKING NEWS
latest

Sunday, December 6, 2020

சவுதி சாலை விபத்தில் குழந்தை உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்:

சவுதி சாலை விபத்தில் குழந்தை உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்:

Dec-6,2020

சவுதி நேற்று நடந்த பயங்கரமான கார் விபத்தில் இந்தியா, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள பெண் குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. மதீனாவை பார்வையிட்ட பிறகு ஜித்தா திரும்பும் வழியில், ஜித்தாவிற்கும் மதீனாவிற்கும் இடையில் உள்ள அம்னாவில் வைத்து இந்த விபத்து நடந்துள்ளது.

இவர்கள் மலப்புரம், பெருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாக், மனைவி பாசிலா மற்றும் இளைய குழந்தை பாத்திமா என்பது தெரியவந்துள்ளது. 12 வயதுடைய மூத்த குழந்தை எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார். ரசாக் சவுதியில் உள்ள தாயிப் என்ற இடத்தில் வேலை செய்து வந்தார் என்பதும், குடும்ப விசாவில் அவர்கள் அங்கு வசித்து வந்தனர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மூன்று பேரின் உடல்கள் குலைஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

சவுதி சட்ட நடவடிக்கை முடித்து மூன்று பேரின் உடல்களை தாயகம் அனுப்பும் பணிகளை நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  ஒருங்கிணைத்து செய்து வருகிறார்கள்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதி சாலை விபத்தில் குழந்தை உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்:

« PREV
NEXT »