BREAKING NEWS
latest

Saturday, November 28, 2020

குவைத்தில் இருந்து குறைந்தது 70,000 பேர் ஜனவரி முதல் படிப்படியாக வெளியேற வேண்டும்:

குவைத்தில் இருந்து குறைந்தது 70,000 பேர் ஜனவரி முதல் படிப்படியாக வெளியேற வேண்டும்:


Nov-28,2020

குவைத்தில் வேலை செய்யும் 60 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி பட்டபடிப்பு சான்றிதழ் இல்லாத 70,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அடுத்த ஆண்டுக்குள் விசா முடியும் முறைக்கு குவைத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். இவர்களின் விசா புதுப்பிப்பதை குடிநுழைய துறை அதிகாரிகள் நிறுத்துவதால் அவர்கள் தொடர்ந்து வேலை செய்ய முடியாது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான இது தொடர்பான முதல்கட்ட செய்தியை படிக்க: https://ktpnews.blogspot.com/2020/11/1-60.html

இதன் ஒரு பகுதியாக 2021 ஜனவரி 1 முதல் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு Work Permit(விசா) புதுப்பிக்கப்படாது என்பதை அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த முடிவில் எந்த மாற்றமும் திருத்தமும் இருக்காது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் குவைத்தில் இவர்களின் குழந்தைகள்  பணிபுரிந்தால், இப்படிபட்ட நபர்கள் குடும்ப விசாவிற்கு தங்களை மாற்றிக்கொண்டு தொடர்ந்து தங்கலாம்,ஆனால் வேலை எதுவும் செய்ய முடியாது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இருந்து குறைந்தது 70,000 பேர் ஜனவரி முதல் படிப்படியாக வெளியேற வேண்டும்:

« PREV
NEXT »