BREAKING NEWS
latest

Friday, October 30, 2020

குவைத்தில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் மழை துவங்கும் என்று கணிப்பு:

குவைத்தில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் மழை துவங்கும் என்று கணிப்பு:


அக்டோபர்-30,2020

குவைத்தில்  அடுத்த மாதம்(நவம்பர்) நடுப்பகுதியில் நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர் முகமது கரம் கணித்துள்ளார். குவைத்தில் பிரபல தினசரி நாளிதழ் ஒன்று அளித்த பேட்டியில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் நவம்பர் 8 முதல் குவைத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த வருடம் 130 முதல் 150 மி.மீ வரை மழை எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 

அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் நாட்டின் வெப்பநிலை 18 முதல் 22 டிகிரி செல்சியஸாகக் குறையும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். இதில் வெப்பநிலை சில நேரங்களில் 4 டிகிரிக்கு கீழே குறையும், குறிப்பாக பாலைவன பகுதிகளில்.

Note புகைப்படம் பதிவுக்காக மட்டுமே...

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் மழை துவங்கும் என்று கணிப்பு:

« PREV
NEXT »