BREAKING NEWS
latest

Saturday, October 31, 2020

குவைத்தில் பொது சாலைகளில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மிதிவண்டிகள் பயன்படுத்த தடை:

குவைத்தில் பொது சாலைகளில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மிதிவண்டிகள் பயன்படுத்த தடை:



அக்டோபர்-31,2020

பொது சாலைகளில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவது சட்டத்தின் தெளிவான மீறல் என்று உள்துறை அமைச்சகம்  உறுதிப்படுத்தியுள்ளது.

போக்குவரத்து விதிகளின் 207-வது பிரிவின்படி, சட்டத்தை மீறும் வாகனங்கள் இரண்டு மாதங்களுக்கு மிகாமல் தடுப்பில் வைக்கப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

இதுபோன்ற வாகனங்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பிற சாலை பயனர்களின் உயிருக்கு பெரும்  ஆபத்தை விளைவிக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ளூர்வாசிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

எல்லா வயதினரும் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றை ரசிக்க ஸ்கூட்டர் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

அவற்றில் சில கூட்டுறவு சங்கங்கள் அல்லது அப்பகுதியில் உள்ள பொது பூங்காக்களை சென்றடைய ஒரு எளிய வழியாக பொதுமக்கள்  பயன்படுத்தப்படுகின்றன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பொது சாலைகளில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மிதிவண்டிகள் பயன்படுத்த தடை:

« PREV
NEXT »