BREAKING NEWS
latest

Friday, January 24, 2020

குவைத் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளனர்:

குவைத் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளனர்:


குவைத் சர்வதேச விமான நிலையத்தில் கடைபிடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சுகாதார ஒழுங்கு முறைகளுக்கான பிரநிதிகள், சிவில் விமானப் போக்குவரத்து பொது நிர்வாகத்தின் பிரதிநிதிகள், விமான நிலையத்தின் அவசர பிரிவு சுகாதார துறை குழுவின் தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் யாரிடமாவது இந்த நோயின்   அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை கிளினிக் மற்றும் விமான நிலையத்தில் தனிமைப்படுத்தும் அறை ஆகியவை  தயாராக உள்ளது மற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கு கையுறைகள் மற்றும் முகமூடி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது என்ற தகவலும் வெளியாகியுள்ளது

குவைத் சுகாதாரத் துறையின் அமைச்சகத்தின்  ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. பயணிகள் இது தொடர்பான பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுத்தல்.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளனர்:

« PREV
NEXT »