BREAKING NEWS
latest

Saturday, July 27, 2019

குவைத்தில் இலங்கையை சேர்ந்தவர் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் இலங்கையை சேர்ந்தவர் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடிசைச் சேர்ந்தவர் இன்று(26/07/2019) மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.இவர் குவைத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார் என்று செய்தியில்தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணமடைந்த நபர் ஓட்டமாவடி-2ஆம் வட்டாரம், எம்.கே.வீதியைச் சேர்ந்த அபுசாலி யாகூப் (வயது 42) என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் இன்று விடுமுறை என்பதால் உறவினர் ஒருவரின் அறையில் இருக்குப்போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இரண்டு பிள்ளைகளின் தந்தையான மரணமடைந்த நபரின் உடல் தற்போது குவைத் மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.உடலை நாட்டிற்கு கொண்டுச் செல்லும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இலங்கையை சேர்ந்தவர் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »