BREAKING NEWS
latest

Saturday, July 27, 2019

குவைத்தில் இன்று தமிழர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்:

குவைத்தில் இன்று தமிழர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்:

குவைத்தில் வேலை செய்துவந்த இந்திய தமிழகம் திருவண்ணாமலை மாவட்டம், அண்ணா நகர்,9வது தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் இன்று(27/07/2019) சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவருடைய தந்தை பெயர் சேட்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஷாஜகான் குவைத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த சில வருடங்களாக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் குவைத்தில் இயங்கி வருகிற தமிழ் மக்கள் சேவை மையத்தில் இணைந்து உதவியாளராக பணி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இன்று தமிழர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்:

« PREV
NEXT »