BREAKING NEWS
latest

Wednesday, June 26, 2019

குவைத்தில் இந்திய தமிழகத்தைச் சேர்ந்த நபர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:


குவைத்தில் இந்திய தமிழகத்தைச் சேர்ந்த நபர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:
குவைத்தில் வேலை பார்த்துவந்த இந்திய தமிழகத்தைச் சேர்ந்த நபர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இவர் பெயர் பிரபாகரன்(வயது-37) தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் தாலுகா,அய்யாவாடியை அடுத்த தண்டன் தோட்டம் பழக்கரை தெருவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவருடைய தந்தை பெயர் பன்னீர்செல்வம் ஆகும்.

குவைத்தில் கப்ஃத்(Kabad) பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு தீடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது என்றும்,இதில் அவர் மரணமடைந்ததாதகவும் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
         
பிரபாகரன் உடலை தாயகம் அனுப்பும் முயற்சியில் குவைத் மக்கள் சேவை மைய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.குவைத் சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடித்து நாளை விமானம் மூலம்  உடல் தாயகம் அனுப்பப்படும் என்றும், அங்கிருந்து சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்படும் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்திய தமிழகத்தைச் சேர்ந்த நபர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »