BREAKING NEWS
latest

Saturday, June 29, 2019

துபாயில் ஏஜென்சி மூலம் ஏமாற்றப்பட்ட 4 தமிழ் பெண்கள் அதிரடி மீட்பு என்ற செய்தி வெளியாகியுள்ளது:


துபாயில் ஏஜென்சி மூலம் ஏமாற்றப்பட்ட 4 தமிழ் பெண்கள் அதிரடி மீட்பு என்ற செய்தி வெளியாகியுள்ளது:
தூயில் நல்ல வேலை சம்பளம் என்ற போலியான வாக்குறுதிகளை வழங்கி கூறிய வேலை வழங்காமல்,ஏமாற்றி நடன விடுதிக்கு அழைத்து செல்லப்பட்ட இந்திய தமிழகம் கோயம்புத்தூரை சேர்ந்த  4 தமிழ் பெண்களை மத்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் முரளிதரன் அவர்கள்
அதிரடி நடவடிக்கை மூலம் துபாய் இந்திய தூதரக அதிகாரி விபுல் துபாய் பொலிசார் உதவியுடன் 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

இவர்களை 4 தினங்களுக்கு முன்புதான் துபாய் அழைத்து செல்லப்பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.இவர்களை அறையில் அடைத்து வைத்து பின்னர் வலுக்கட்டாயமாக நடன விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண்களில் ஒருவர் தன்னுடைய குடும்பத்திற்கு அனுப்பி வீடியோ செய்தி அமைச்சர் அவர்கள் பார்வைக்கு வந்தநிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நேற்று மாலையில் விமானம் மூலம் 4  பெண்களும் பத்திரமாக தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

Reporting by Kuwait tamil pasanga team.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to துபாயில் ஏஜென்சி மூலம் ஏமாற்றப்பட்ட 4 தமிழ் பெண்கள் அதிரடி மீட்பு என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »