BREAKING NEWS
latest

Saturday, May 25, 2019

குவைத்தில் மாரடைப்பு சம்மந்தப்பட்ட அவசரகால சிகிச்சைக்கு கட்டண சலுகை சுகாதார துறை அமைச்சர் தகவல்:


குவைத்தில் மாரடைப்பு சம்மந்தப்பட்ட அவசரகால சிகிச்சைக்கு கட்டண சலுகை சுகாதார துறை அமைச்சர் தகவல்:
            
    குவைத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனை கட்டணங்களை முக்கிய மருத்துவமனைகளில் 2 தினார் கட்டணம் 5 தினாராக அதிகரித்த நிலையில் பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தது, இதுபோல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1 தினார் கட்டணம் 2 தினாராக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Health Minister Sheikh Dr. Bassil Al-Sabah 

          இந்நிலையில் குவைத் சுகாதா துறை அமைச்சர்(Health Minister) Sheikh Dr. Bassil Al-Sabah அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குவைத்திகள் அல்லாத வெளிநாட்டினர் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சினையால் அவசரகால நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்கள் மருத்துவ கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
             இந்த சலுகை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவம் மற்றும் மருத்துவமனை தலைமை அதிகாரி ஆகியோர் அறிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும்.அனைத்து துறையிலும் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.
      வீட்டுத் தொழிலாளர் உள்ளிட்ட 10 ற்கும் மேற்பட்ட பிரிவு தொழிலாளர்களுக்கு சுகாதார துறை முன்னரே மருத்துவ கட்டண சலுகை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னர் சுகாதாரத் துறை ஊழியர்கள்,12 வயதிற்கு கீழ் உள்ள கேன்சர் நோயாளிகள், பாதுகாப்பு மையங்கள் மற்றும் சமூக நலத் துறை அமைப்புக்கள் விடுதியில் தங்கவைக்கபட்ட நபர்கள், சிறைகளில் உள்ள கைதிகள் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட பிரிவுகளில் சலுகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Report by Kuwait tamil pasanga team

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் மாரடைப்பு சம்மந்தப்பட்ட அவசரகால சிகிச்சைக்கு கட்டண சலுகை சுகாதார துறை அமைச்சர் தகவல்:

« PREV
NEXT »