BREAKING NEWS
latest

Wednesday, December 2, 2020

உலகில் முதல் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் மக்களுக்கு பயன்படுத்த அனுமதி:

உலகில் முதல் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் மக்களுக்கு பயன்படுத்த அனுமதி:



Dec-1,2020

கொரோனோ வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் சோதனை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு செலுத்தி ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடத்தப்பட்ட சோதனையிலும் வெற்றி கிடைத்த நிலையில் இந்த மருந்து முதல் முறையாக பிரிட்டன் மக்களுக்கு போடப்படும் என்று சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது.

பல்வேறு நோய்கள் மூலம் நீண்டகால அவதிப்படும் மக்களுக்கு கொரோனா பாதிப்பு எளிதில் தொற்றிக்கொள்ளும் என்பதால் இந்த மருந்து முதலில் அவர்களுக்கு அடுத்த வாரத்தின் துவக்கத்தில் வழங்கபடும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி 95 சதவீதம் வெற்றியடைந்துள்ள என்று அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் குவைத்தில் அரசு சார்பிலும் இந்த கம்பெனியிடம் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to உலகில் முதல் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் மக்களுக்கு பயன்படுத்த அனுமதி:

« PREV
NEXT »