BREAKING NEWS
latest

Tuesday, December 8, 2020

குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து துபாய் செல்ல கோவிட் பரிசோதனை தேவையில்லை:

குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து துபாய் செல்ல கோவிட் பரிசோதனை தேவையில்லை:


(Photo: Google Source)

Dec-7,2020

குவைத்திலிருந்து துபாய்க்குள் நுழைய கோவிட் பரிசோதனை தேவையில்லை என்று துபாய் விமான  கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இது டிசம்பர் 6 முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய் சர்வதேச விமான நிலையம் (அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு)வருவதற்கு முன்பு ஜி.சி.சி நாடுகளைச் சேர்ந்தவர்கள் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதை எமிரேட்ஸ் மற்றும் Fly-துபாய் விமானங்கள் தங்கள்  இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட புதுப்பித்த பயண விதிகளின்படி  ஜி.சி.சி நாடுகளிலிருந்து (குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஓமான்) துபாய்க்கு வரும் அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு முன்பு கோவிட் 19 பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியஅவசியம் இல்லை. மாறாக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவுடன் பயணிகள் கோவிட் பரிசோதனை செல்லலாம் என்று சம்பந்தபட்ட துறை அறிவித்துள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து துபாய் செல்ல கோவிட் பரிசோதனை தேவையில்லை:

« PREV
NEXT »