BREAKING NEWS
latest

Saturday, June 12, 2021

குவைத் அரச குடும்பத்தவரான ஷேக் மன்சூர் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது

குவைத் அரச குடும்பத்தவரான ஷேக் மன்சூர் அவர்கள் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தியை தினசரி நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது

Image : ஷேக் மன்சூர் அவர்கள்

குவைத் அரச குடும்பத்தவரான ஷேக் மன்சூர் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது

குவைத் அரச குடும்பத்தவர் ஷேக் மன்சூர் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா(வயது-79) அவர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவருடைய மறைவு குறித்து அறிந்த சவுதி, அமீரகம், ஓமான் உள்ளிட்ட மேலும் பல வளைகுடா நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து செய்தியை குவைத் மன்னருக்கு அனுப்பி உள்ளனர்.

இதை தொடர்ந்து நேற்று(11/06/21) வெள்ளிக்கிழ‌மை மத்தியானம் உடல் நல்லடக்கம் தொடர்பான நடவடிக்கைகள் நடைபெ‌ற்றது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மறைந்த ஷேக் அகமது அல்-ஜாபர் அல்-சபா அவர்களின் எட்டாவது மகன் அவார் மரணமடைந்த ஷேக் மன்சூர் அவர்கள், இவர் நாட்டின் அரச பதவிகள் மற்றும் அரசியல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடாமல் விலகியே இருந்து சொந்தமாக Business செய்து வந்தார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் அரச குடும்பத்தவரான ஷேக் மன்சூர் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »