BREAKING NEWS
latest

Wednesday, February 10, 2021

பஹ்ரைனில் மசூதிகளில் பிரார்த்தனை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது

பஹ்ரைனில் மசூதிகளில் பிரார்த்தனை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது;கோவிட் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Image credit: BNA

பஹ்ரைனில் மசூதிகளில் பிரார்த்தனை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது

பஹ்ரைனில் உள்ள மசூதிகளில் பிரார்த்தனை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவு பிப்ரவரி-11 நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவிட் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பஹ்ரைனில் சிகிச்சையில் இருந்த நான்கு பேர் கூட கோவிட் காரணமாக இறந்தனர். 719 நபர்களுக்கு புதிதாக கோவிட் உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் 323 பேர் வெளிநாட்டவர்கள். தற்போது 6036 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 46 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மேலும் 461 பேர் குணமாகி வீடு திரும்பினர் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to பஹ்ரைனில் மசூதிகளில் பிரார்த்தனை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது

« PREV
NEXT »