BREAKING NEWS
latest

Sunday, December 20, 2020

அமீரகத்தில் கோவிட் காரணமாக வேலை இழந்த இந்தியர் 7.3 கோடி பரிசு பெற்றார்:

Dec-20,2020

உலகெங்குமுள்ள லட்சக்கணக்கான மக்கள் கோவிட் காரணமாக தங்கள் வாழ்வாதார வேலை இழந்து வருகின்றனர். இந்நிலையில் துபாய் டூட்டி-ஃப்ரீ மூலம் ரூ.7 கோடிக்கு மேல் இந்தியர் ஒருவர் பரிசு பெற்றுள்ளார்.

கோவிட் 19 நெருக்கடியால் வேலையை இழந்த இந்திய,கேரளா மாநிலம் காசர்கோடு நகரைச் சேர்ந்த நவ்னீத் சஜீவன், இவர் இந்திய ரூபாயில் 7.3 கோடி பரிசாக பெற்று அதிர்ஷ்டசாலி ஆகியுள்ளார். திருமணமாகி மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை உள்ளது.

நவ்னீத் அபுதாபியில் ஒரு நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்,கோவிட் காரணமாக தன்னுடைய வேலையை இழந்தார். அந்த நிறுவனத்தில் அவருடைய கடைசி வேலை இந்த மாதம் டிசம்பர்-28 ஆகும். 

இதற்கிடையில், ஒரு புதிய வேலைக்காக நேர்காணல் முடித்து திரும்பும் போது பரிசு பெற்றதாக தொலைபேசி அழைப்பு வந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நவ்னீத் நான்கு நண்பர்களுடன் இந்த டிக்கெட்டை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அமீரகத்தில் கோவிட் காரணமாக வேலை இழந்த இந்தியர் 7.3 கோடி பரிசு பெற்றார்:

« PREV
NEXT »